ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதியிடம் 'சூது கவ்வும்' படத்தில் வருவது போல் யாரையாவது கடத்த வேண்டும் என்று நினைத்தால் யாரைக் கடத்துவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் நயன்தாராவைத்தான் கடத்துவேன் என்று பதிலளித்தார். நயன்தாராவை அவ்வளவு பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். அன்று அவர் சொன்ன ஆசை அவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என அவரே கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்க 'நானும் ரௌடிதான்' என்ற படத்தை தனுஷ் அவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க முடிவெடுத்தார். சிம்பு, வரலட்சுமி நடித்த 'போடா போடி' படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமானது. விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சியில் சொன்னது போல ரவுடியாக இருக்கும் அவர் நயன்தாராவைக் கடத்துவது போல் காட்சி 'நானும் ரௌடிதான்' படத்தில் இருக்கிறதா இல்லையா என்பது போகப் போகத்தான் தெரியும்.
நயன்தாரா தற்போது முன்னணி இயக்குனர்களைத் தவிர வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து மற்ற நடிகைகளுக்கு சரியான போட்டியாக இருக்கிறார். ஆரியுடன் ஒரு படத்தில் நடித்து வருபவர் தற்போது விஜய் சேதுபதியுடனும் ஜோடி சேர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.