ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அகடம் என்ற படத்தை ஒரே டேக்கில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த ஜே.எம்.இசாக் அடுத்து லாரா என்ற திகில் படத்தை இயக்குகிறார். அகரம் படத்தில் அறிமுகமான ஸ்ரீப்ரியங்கா இதிலும் நடிக்கிறார். புதுமுகம் ஹரி ஹீரோவாக அறிமுகமாகிறார்.
படத்தை பற்றி இசாக் கூறியதாவது: ஓரு பிரபலமான நாவலாசிரியர் ஒரு திகில் கதை எழுதுவதற்காக தனிமையான ஒரு இடத்துக்குச் செல்கிறார். அவருக்கு துணையாக அவரது மனைவியும் செல்கிறார். முதல் நாள் அவர் நாவலில் எழுதும் சம்பவங்கள் மறுநாள் நிஜத்தில் நடக்கிறது. அவர் நாவல் படி கணவனே மனைவியை கொலை செய்கிற காட்சியை எழுதிவிட்டு அது மறுநாள் நடக்கிறதா என்று சோதித்து பார்க்கிறார். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையும் வருகிறது. அதிலிருந்து தானும் தப்பி, மனைவியையும எப்படி காப்பாற்றுகிறார் என்கிற கதை. அகடம் டீம் அப்படியே இதில் இருக்கிறது. சென்னை, முணாறு, பகுதியில் படம்பிடித்திருக்கிறோம் இந்த மாதம் ரிலீசாகிறது என்றார்.