14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தயாரிப்பாளராக இருந்து நடிகரானவர் ஜெயபிரகாஷ், அப்பா, வில்லன், மாமன் வேடங்களுக்கு இவரைத்தான் கூப்பிடுகிறார்கள். பசங்க படத்தில் பயணத்தை தொடங்கி குறுகிய காலத்திற்குள் 50 படங்களை தாண்டிவிட்டார். அடுத்த வளர்ச்சியாக லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கிறார்.
அந்த அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது: வாழ்க்கை நாம் நினைப்பது மாதிரி அமைவதில்லை. தயாரிப்பாளராக இருந்தபோது சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. காலம் அவருடன் நடிக்க வைத்துவிட்டது. என் வாழ்க்கையின் முக்கியமான தருணம் ரஜினியுடன் நடித்தது. இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் சார் என்னிடம் "லிங்கா படத்தில் அணைகட்டும் ஒரு என்ஜினீயர் வேடம் இருக்கிறது. குறைந்த காட்சிகள்தான் நடிக்கிறீங்களா-?" என்று கேட்டார். கரும்பு தின்ன கூலியா சார் ரஜினி படத்தில் ஒரு சீன்னாலும் நடிக்கிறேன்னு சொல்லி நடிக்க வந்தேன்.
மங்களூர் அருகே சாகர் என்ற இடத்தில் சூட்டிங் நடந்தது. நான் நான்கு நாள் நடித்தேன். நான்கு நாளும் மழை பெய்து கொண்டே இருந்தது. ஆயிரம் பேர் ஸ்பாட்டில் இருந்தார்கள். ஆயிரம்பேர் தங்கவும் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம்பேருக்கும் குடைகள் கொடுத்திருந்தார்கள். திடீரென்று மழை வந்தால் ஆயிரம்பேரும் குடையை விரித்து நின்று கொள்வார்கள் மழை நின்றதும் அப்படியே படப்பிடிப்பு தொடரும். அந்த ஆயிரம் பேரில் ஒருவராக ரஜினியும் குடைபிடித்து நிற்பார். கேரவனுக்கு செல்ல மாட்டார்.
நான் அவரை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டே இருப்பேன். அவர் மீதுள்ள மரியாதையால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஒதுங்கி நிற்பேன். ஒரு நாள் இதனை கவனித்த ரஜினி என் அருகில் வந்தார் "என்ன ஜே.பி சார்... அமைதியாவே இருக்கீங்க... பேசகூட மாட்டேங்குறீங்க... புரட்யூசரா இருந்து நடிகராயிகியிருக்கீங்க. உங்க படங்கள் பார்க்குறேன் எக்ஸ்லெண்ட் சூப்பர்..."னு சொன்னார் நான் ஆடிப்போயிட்டேன். அவரது எளிமை, உழைப்பு இதையெல்லாம் பார்த்து மிரண்டுவிட்டேன். அவரோட நடிச்சது என் பாக்கியம். என்றார் ஜெயபிரகாஷ்.