ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கொஞ்சநாளாகவே, யாரையும் அதிகமாக வம்புக்கு இழுக்காமல் இருந்த இயக்குனர்ராம்கோபால்வர்மா, இருதினங்களுக்குமுன், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர்களை நன்றாகவே உசுப்பேற்றி விட்டிருக்கிறார். ராம்கோபால்வர்மாவின் முன்னாள் உதவியாளரும், தற்போதைய தெலுங்கு முன்னணி இயக்குனர்களில் ஒருவருமான பூரிஜெகன்னாத், தற்போது ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'டெம்பர்' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்தின், சிலகாட்சிகளை, ராம்கோபால்வர்மா பார்த்தாராம். அதைப்பற்றித்தான், அவருடைய டுவிட்டர் வலைத்தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
“டெம்பர்' படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜுனியர் என்டிஆர் அற்புதமாக இருக்கிறார். ஜெகன் இதுவரை உருவாக்கிய ஹீரோ கதாபாத்திரங்களிலேயே, இதுதான் மிகச்சிறந்தது. அவரிடமிருந்து வெளிவர உள்ள மிகப்பெரிய கமர்ஷியல் படமாக இது அமையும் என நினைக்கிறேன். என்டிஆர் படத்தில் மலை போல உயர்ந்து நிற்கிறார்.இந்தப்படத்திற்குப்பிறகு, ஜெகன், ஜெ'கன்' ஆகவும் என்டிஆர் அவருடைய புல்லட் ஆகவும் இருப்பார்கள். 'டெம்பர்' படத்துடன் ஒப்பிடும்போது, ஜெகனின் 'போக்கிரி, பிஸினஸ்மேன்' ஆகிய படங்கள் தோல்விப்படங்களாகவேதோன்றுகிறது,” என்று குறிப்பிட்டிருந்தார்.