ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு பயிற்சி டாக்டரின் ஆரம்ப அனுபவங்கள் தான் ஹிப்போக்ரேட்ஸ். நேர்த்தியாக எடுக்கப்பட்ட உணர்ச்சி பூர்வமான படம் (தற்போது ஜீ தமிழ் சேனலில் வரும் உயிர்மெய் சீரியல் போல)
பெரிய டாக்டராக ஆக வேண்டும் என்ற ஆசையுடன், 23வயது மருத்துவ பட்டதாரி பெஞ்சமின். அந்த பெரிய ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக சேருகிறார், புது அனுபவங்கள் நிறைய கிடைக்கிறது. வயதான ஒருவருக்கு சிறு குடலில் பிரச்னைக்காக ஆஸ்பத்திரியில் சேருகிறார். பெஞ்சமினுக்கு அவரை கவனித்து கொள்ளும் பொறுப்பு. சிகிச்சையையும், மருந்தையும் பெஞ்சமின் மாற்றுகிறார். டியூட்டியிலிருந்து இவர் திரும்பியதும், நோயாளி இறந்துவிடுகிறார். அவருக்கு இ.சி.ஜி., டெஸ்ட் நடத்தியிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்ற நிலைமை. இசிஜி., உபகரணம் சில நாட்களாக பழுதாகிவிட்டது. பெஞ்சமின் வருத்தப்படுகிறார். நீ தான் இசிஜி., டெஸ்ட் எடுத்தாயே அதிகமாக குடித்ததால் உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவர் இறந்தார் என்று ஆஸ்பத்திரியின் டீன் சொல்லி பெஞ்சமின் மீது பழி வராமல் காப்பாற்றி விடுகிறார். ஏனென்றால் பெஞ்சமின் தந்தை தான் இந்த டீன்.
வெளிநாட்டை சேர்ந்த அப்துல் என்ற மற்றொரு பயிற்சி டாக்டர் அங்கு பணிக்கு சேருகிறார். பெஞ்சமினும் அவரும் இணைந்து பணிபுரிகிறார்கள். அப்துலுக்கு ஏற்கனவே அனுபவம் இருப்பதால் அவரது அணுகுமுறை சரியாகவும் இருக்கிறது. நோயாளிகளும் அவரை பெரிதும் மதிக்கிறார்கள்.
மற்றொரு வயதான நோயாளி விஷயத்தில் பிரச்னை வருகிறது. பெஞ்சமினின் மேற்பார்வையில் இருக்கும் அவருக்கு, அப்துல் வந்து உதவி, அவரது தீராத வலியை குறைக்கிறார். நிலைமை மீண்டும் மோசமாகிறது. ஒரு நிலையில் அவருடைய உறவினர்களிடம் சொல்லிவிட்டு அப்துல் சிகிச்சையை நிறுத்துகிறார். நோயாளி இறந்துவிடுகிறார். அதை அடுத்து நடக்கும் விசாரணையில் பெஞ்சமின் பொறுப்பில் உள்ள நோயாளிக்கு அப்துல் நுழைந்து சிகிச்சையை நிறுத்தியது தவறு என்று அவரது பல்கலை ரிஜிஸ்டரில் இந்த தவறு பற்றி எழுதப்படும் என்று விசாரணையில் முடிவாகிறது. பெஞ்சமினுக்கு எச்சரிக்கை மட்டும் தரப்படுகிறது.
மற்ற டாக்டர்கள், நர்ஸ்கள், அப்துல் சிறப்பாக பணியாற்றியதையும் இந்த கேஸில் கூட உறவினர்களின் ஒப்புதலின் பேரில் தான் அவர் சிகிச்சையை நிறுத்துகிறார் என்பதையும் சொல்லி, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கேட்கிறார்கள். நிர்வாகம் மறுக்கிறது.
ஒவ்வொரு கேஸிலும் தப்பு ஆகிறதே என்று விரக்தி அடைந்து பெஞ்சமின் ஓடும்போது வேகமாக வரும் கார் அவரை மோதி விடுகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்துவிட்டு மீண்டும் பணிக்கு திரும்புகிறார்.
ஆஸ்பத்திரி பின்னணியில் படம் முழுவதும் எடுக்கப்பட்டிருக்கிறது. இளம் பயிற்சி டாக்டர்கள் மற்றும் டாக்டர்கள் சாப்பிடும்போது மகிழ்ச்சியாக பேசிக் கொள்ளும் காட்சிகள் ரசிக்கத்தக்கவை. சாப்பிடும்போது ஆஸ்பத்திரி வேலையை பற்றி பேசினார் என்பதற்கு ஒரு டாக்டரை நாய் போல நடிக்க சொல்லுவது, கோரஸ்ஸாக இளம் டாக்டர்கள் பாடி மகிழ்வது எல்லாம் டானிக் போல் உள்ளது.
நான் டாக்டர் வேலைக்கு லாயக்கில்லை என்று நினைக்கிறேன் என்று அலுத்துக் கொள்ளும்போது அப்துல் கேட்பார்... என்ன வேலை? டாக்டர் வேலை என்பது பெஞ்சமினின் பதில். அதுவேலை இல்லை அது ஒரு சாபம் என்பார் அப்துல். நிகழ்வுகள் தப்பாக போகும் போது அது தானே நிலைமை?
பெரியா தனியார் ஆஸ்பத்திரிகள் என்றாலும், அங்கும் தவறுகள் நடக்கின்றன, சிலர் காப்பாற்றப்படுகின்றனர். சிலர் பலிகடா ஆகிறார்கள், லாபம் தான் நிர்வாகத்தின் குறிக்கோள், தேவையான அளவு டாக்டர்களை உதவியாளர்கள் இருக்கிறார்களா என்பதில் கவனம் செலுத்துவதில்லை போன்றவைகள் பார்க்கும்போது புரிகின்றன.
பெஞ்சமினாக வின்சென்ட் லகோஸ்ட், அப்துல்லாக ரேடா காடெப் நடித்திருக்கிறார்கள். தாமஸ் லிட்லி இயக்கம். லிட்லி மருத்துவம் படித்த பிரெஞ்ச் இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -