மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஜெயசூர்யா, வினய் ஃபோர்ட், அனுஸ்ரீ, அபர்ணா நாயர் மற்றும் பலர் நடிக்க அனீஷ் உபாசானா இயக்கத்தில் அஜய் ஜோஸ் தயாரித்துள்ள படம் 'செகண்ட்ஸ்'. இப்படம் தயாரிக்கப்பட்டு முடிவடைந்து சுமார் ஓராண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதாம். ஆறு மாதத்திற்கு முன்பே படம் வெளிவர வேண்டுமாம். ஆனால், படத்தை வெளியிட வாங்கிய வினியோக நிறுவனம் தயாரிப்பாளருக்குத் தெரியாமல், வேறொருவருக்கு படத்தை விற்று விட்டார்களாம். படத்தில் நடித்த நட்சத்திரங்களுக்கும் கலைஞர்களுக்கும் கூட இன்னும் சம்பளம் வழங்காததால் வினியோக நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமலே போய்விட்டதாம்.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண அந்த நிறுவனத்தின் முன்பாக அமர்ந்து படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் வினியோக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்களைச் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு அவர்களை வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் சொல்லியிருக்கிறார்களாம்.
தங்களது படம் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதால் அதை வெளியிட படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டது மலையாளத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. படத்தில் நடித்த கலைஞர்கள், பணியாற்றியவர்கள் அனைவருமே அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்களாம்.