ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செக் மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. ராஜமரியாதை, நானே ராஜா நானே மந்திரி, பதில் சொல்வாள் பத்ரகாளி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவா. தமிழ் தவிர நிறைய தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராஜேசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் சேர்ந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்நிலையில், சேகர் ரெட்டி என்பவருக்கு ஜீவிதா ரூ.22 லட்சத்துக்காக செக் கொடுத்துள்ளார். அந்த செக்கை, சேகர் ரெட்டி வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் செக் திரும்பி வந்துவிட்டது. மேலும் அதற்குரிய மாற்று செக்கையோ அல்லது பணத்தையோ ஜீவிதா கொடுக்கவில்லை. இதனையடுத்து சேகர் ரெட்டி, ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக ஜீவிதாவுக்கு கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் ஜீவிதா அதையும் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜீவிதாவுக்கு ஜாமினில் வெளிவராத முடியாத அளவுக்கு பிடிவாரண்ட் அளித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பளித்த ஐதராபாத் கோர்ட், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.