ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இந்தியன் பனோரமாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு மனதை தொட்ட மற்றொரு படம் தி ப்ரீடம் பைல். இயக்குநர் அனந்த் நாராயண் மஹாதேவன் மும்பையில் வாழும் தமிழர். 30 மேடை நாடகங்களிலும், நூற்றுக்கும் மேற்பட்ட டெலிவிஷன் தொடர்களில் முக்கிய கேரக்டர்களிலும், 75 திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார், பதினொறு படங்களை இயக்கி தேசிய விருதும் பெற்றுள்ளார்.
கெளர் ஹரிதாஸ் இன்னும் மும்பையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சுதந்திர போராட்ட தியாகி. சுதந்திர போராட்டங்களிலும், சிறைச்சாலையிலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை, நண்பர்கள், உறவினர்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்வார். பலர் அவற்றை நம்பாமல் அவர் ரீல் விடுகிறார் என்று நினைப்பதுண்டு. ஆனாலும் தான் நாட்டுக்கு செய்த சேவையை, தியாகத்தை என்றுமே அவர் மற்றவர்களுக்கு நிரூபிக்க முயன்றதில்லை.
சுதந்திர தியாகியின் மகன் என்ற முறையில், கல்லூரியில் சேர விரும்புகிறார் அவரது மகன். அதற்கு சான்றிதழ் ஒன்று தேவைப்படுகிறது. அதுவரை அரசிடமிருந்து எந்த சான்றோ, சுதந்திர தியாகிகளுக்கு தரப்படும் தாமிர பத்திரமோ அவர் வாங்கவில்லை. அதை வாங்க அலையும்போது தான் அரசு நிர்வாகத்தின் அவலம் அவருக்கு புரிகிறது. ஒரிசாவில் சுதந்திர போரில் கலந்து கொண்டதால் அங்கு தான் பெற வேண்டும், மகாராஷ்டிரா அரசு நிர்வாகம் தர முடியாது என்கிறார்கள். எவ்வளவோ கடிதங்கள் எழுதியும், நேராக பல தடவை சென்றும் எந்த பலனும் கிட்டவில்லை. லஞ்சம் கொடுக்க மாட்டேன், உண்மையாக நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியிருக்கும் நான் ஏன் அதற்கு உண்மையை நிரூபிக்க லஞ்சம் தர வேண்டும்.? என்று தன் கொள்கையில் ஸ்ட்ராங்காக நிற்கிறார். விளைவு? அவருக்கு முப்பது ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு தான் அந்த சான்றிதழ் கிடைக்கிறது. என்ன அவலம்.?
இந்தப்படம் உண்மையில் நடந்த சம்பவங்களை வைத்தே எடுக்கப்பட்டுள்ளது. கெளர் ஹரிதாஸாக பிரபல இந்தி நடிகர் வினய் பதக் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக கொங்கனா சென் மற்றும் ரஜத் கபூர், ரன்வீர் ஷோரே, தன்னிஷ்டா போன்ற பலரும் நடித்திருக்கிறார்கள். வயலின் மாஸ்ட்ரோ எல்.சுப்பிரமணியம் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சலாம் பாம்பே படத்திற்கு பிறகு இப்போது தான் மீண்டும் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.
காந்தி மற்ற தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்காமல்(சுவையான சம்பவங்கள் இருந்தும்), ஆனந்த் நாராயண் மஹா தேவன், இந்த சப்ஜெக்ட்டை படமாக்க வந்ததற்கு பாராட்ட வேண்டும். போற்றி வணங்கப்பட வேண்டிய தியாகிக்காக இந்த அவலம் அவமானம் என்று நம்மை கொதிக்க வைக்கிறது.
டிஅண்ட்ஏ என்ற பிரபல ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர் சி.பி.சுரேந்திரன் இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.
இந்தப்படத்தை தயாரித்த சித்தி விநாயக் சினி விஷன், அவர்களது முந்தைய தயாரிப்பான மீ சிந்துதாய் சப்கல் படத்திற்கு நான்கு தேசிய விருதுகள் பெற்றிருக்கிறது.
கோவாவிலிருந்து -எஸ்.ரஜத்-