ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் |
பாணா காத்தாடி படத்தில் அறிமுகமான அதர்வா, அதையடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அதுவரைக்கும் ஒரு சாதாரண நிலையிலேயே இருந்த அதர்வாவுக்கு பாலாவின் பரதேசி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்ததும், கோடம்பாக்கத்தில் பேசப்படும் நடிகரானார். அதோடு, பாலாவின் படத்தில் அதர்வா பட்டை தீட்டப்பட்டு விடுவார். அவரது மார்க்கெட்டும் இனி எகிறிவிடும் எனறு நினைத்த பல இயக்குனர்கள் அதர்வாவிடம் கதை சொல்ல நீண்ட கியூவில் நின்றனர்.
அதனால் பரதேசியில் நடித்து முடித்ததும், தன்னை முற்றுகையிட்ட டைரக்டர்களிடம் கதைகளை கேட்ட அதர்வா, அதில் இரும்புக்குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்களை மட்டுமே தேர்வு செய்தார். ஆனால் அப்படி அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்த இரும்புக்குதிரை அவரை ஏமாற்றி விட்டது. ஆனபோதும், தற்போது தடகள வீராங்கனையாக நடித்து வரும் ஈட்டி படத்தில் அடுத்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்.
மேலும், இரும்புக்குதிரை கொடுத்த அதிர்ச்சி காரணமாக, இப்போது நார்மலான கதைகளில நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அதர்வா, வித்தியாசமான கதைகளாக தேடிக்கொண்டிருக்கிறார். யாராவது ஒரு டைரக்டரிடம் மாறுபட்ட கதை இருக்கிறது என்று கேள்விப்பட்டால், உடனே அவர்களை தொடர்பு கொண்டு, அந்த கதையைப்ப்றறி கேட்கிறார். அதர்வாவின் இந்த வித்தியாசமான கதைதேடலைப்பற்றி அறிந்த சில புதுமுக டைரக்டர்களும் தற்போது அதர்வாவை புதிய கோணத்தில் சித்தரிக்கும் கதைகளுடன் அவரை சந்தித்து வருகின்றனர்.