ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமலா நடித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் உயிர்மெய் தொடர் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் முதல் மருத்துவம் தொடர்பான சீரியல் இது. ஷில்பா வி.எஸ்.ராகவன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்க்ள. சுந்தர்.கே.விஜயன் இயக்குகிறார், கிரண் இசை அமைக்கிறார். பத்ரி வெங்கடேசன் கதை, திரைக்கதை எழுதுகிறார்.
டாக்டர்கள், நோயாளிகள் ஆஸ்பத்திரி என்று நகர்ந்த கதை ஆரம்பத்தில் டல் அடித்தது. இதை புரிந்து கொண்ட இயக்குனர் தற்போது கதையின் போக்கை மாற்றியிருக்கிறார். டாக்டர் கவிதா (அமலா) பணியாற்றும் தயானந்தா மெடிக்கல் பவுண்டேஷனில் சொத்து பிரச்னை வருகிறது. தயாவின் மரணத்துக்கு பிறகு அவரின் வாரிசுகள் மருத்துவமனையை இலவசமாக நடத்த விரும்பவில்லை. அதனை பணம் கொழிக்கும் வியாபாரமாக்க நினைக்கிறார்கள். இதனால் டாக்டர் கவிதாவின் கண்காணிப்பில் இருக்கும் ஏழை நோயாளிகள் வெளியேற்றப்படும் சூழ்நிலை வருகிறது. மருத்துவமனையை வியாபாரமாவதை தடுக்கும் அமலாவின் குடும்பத்துக்கு வாரிசுகள் பலவித டார்ச்சர்களை கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். டாக்டர் கவிதா அவற்றை எதிர்கொள்ள தயாராகிறார். இப்படி கதை இப்போது சூடுபிடித்திருப்பதால் டி.ஆர்.பியில் எகிறி முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.