சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 'ஸ்வாச் பாரத்' - கிளீன் இந்தியா திட்டத்திற்கு தமிழ்த் திரைப்பட நடிகரான கமல்ஹாசன் பிரதமரால் நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் அவருடைய பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். சென்னை புறநகரில் உள்ள ஏரி ஒன்றை அவர் சுத்தப்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல தென்னிந்திய நட்சத்திரங்களும் அந்தத் திட்டத்தில் பங்கேற்று பல இடங்களை சுத்தப்படுத்தினர். சமந்தா, தமன்னா என பலரும் ஏதோ ஒரு இடத்தை சுத்தப்படுத்தி செய்திகளிலும் இடம் பெற்றனர்.
ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் நடிகருமான மோகன் பாபு சில நாட்களுக்கு முன் 'ஸ்வாச் பாரத்' திட்டத்தில் பங்கேற்றார். அதோடு அவருடைய நெருங்கிய நண்பரான ரஜினிகாந்தை இந்தத் திட்டத்தில் கலந்து கொள்ள பரிந்துரை செய்துள்ளார். நண்பரின் வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த் 'கிளீன் இந்தியா' திட்டத்தில் பங்கேற்பாரா என்பதுதான் அடுத்த கேள்வி. தென்னிந்தியாவிலிருந்து நடிகர் கமல்ஹாசனுக்கு மட்டும் பிரதமரால் அழைப்பு விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து அந்தத் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்தினார்.
இந்நிலையில் ரஜினிகாந்தைம் அந்தத் திட்டத்தில் பங்கேற்க நண்பர் மோகன்பாபு பரிந்துரைத்துள்ளதால் ரஜினிகாந்தும் விரைவில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.