ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தியில் ஆடி போனா ஆவணி என்று பாடியபடி கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்த கானா பாடகர் பாலா, சில கானா பாடகர்களைப்போல் வந்த வேகத்திலேயே காணாமல் போகாமல், அழுத்தமாக காலூன்றி விட்டார். அதோடு, ஆரம்பத்தில் பின்னணி மட்டுமே பாடியவர், பின்னர், பாட்டு எழுதியும் பாடினார். அதையடுத்து, காசு பணம் துட்டு மணி மணி -என்றபடி திரையிலும் தோன்றி தான் பாடிய பாடல்களுக்கு நடனமாடியும் வருகிறார்.
அநத வகையில், தற்போது சுமார் 30 கானா பாடகர்கள் தமிழ் சினிமாவில் பாடிவந்தபோதும் யாருக்குமே கிடைக்காத ஒரு இடம் இவருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது.. மேலும், இதுவரை மேல்தட்டு ஹீரோக்களின் படங்களில் பாடும் வாய்ப்பினை பெறாமல் இருந்து வந்த கானா பாலா, தற்போது அஜீத் நடிக்கும் என்னை அறிந்தால் படத்திலும் ஒரு பாடல பாடியிருக்கிறார்.
இந்த நிலையில், சமீபகாலமாக தான் பாடியுள்ள படங்களின் ஆடியோ விழாக்களிலும் அவ்வப்போது தலைகாட்டுகிறார் கானா பாலா. அப்போது தன்னைப்போன்று படத்துக்கு ஒரு படம் மட்டுமே பாட்டு எழுதி வருபவர்களை போட்டியாக நினைக்கும் சில பாடலாசிரியர்கள் மொத்த பாடல்களையும் தாங்களே எழுதி வருவதையும் மறைமுகமாக தாக்கி பேசி வருகிறார்.