ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோவா படவிழாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் நடக்கும் பெரிய சர்வதேச திரைப்பட விழா, கேரளாவில் நடப்பதாகும். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 12 முதல் 19 வரை திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.
இந்தப் படவிழாவில் இந்த ஆண்டின் சிறப்பு அம்சமாக "தற்போதைய இந்திய சினிமா" என்ற பெயரில் படங்களை திரையிடுகிறார்கள். இதற்காக இந்தியா முழுவதிலிமிருந்து 55 படங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து 7 படங்களை தேர்வு செய்திருக்கிறார்க்ள. இயக்குனர்கள் லெனின் ராஜேந்திரன், கே.மதுபால், எம்.சி.ராஜ நாராயணன் ஆகியோர் நடுவர்களாக இருந்து இந்த படங்களை தேர்வு செய்துள்ளனர்.
பண்ணையாரும் பத்மினியும் (தமிழ்), ஏக் ஹஸார்ச்சி (மராட்டி), தக் உஜ்லா, மித் ஆஃப் கிளியோபாட்ரா. கவுரி ஹாரி தஸ்தன் (இந்தி), 89, நயன்சம்பர் தின் ராத்ரி (பெங்காலி) ஆகிய படங்கள் தேர்வாகி உள்ளது.
சர்வதேச திரைப்பட விழா கேரளாவில் நடக்கிறது. படத்தை தேர்வு செய்தவர்கள் மலையாள இயக்குனர்கள். ஆனாலும் ஒரு மலையாள படம்கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண்ணையாரும் பத்மினியும், ஒரு பழைய பிரிமியர் பத்மினி காருக்கும் அதன் உரிமையாளருக்கும் இடையோன பிணைப்பை சொல்கிற படம். இதில் விஜய்சேதுபதி, ஜெயபிரகாஷ், துளசி, ஐஸ்வர்யா நடித்திருந்தனர். அருண்குமார் இயக்கி இருந்தார். மீடியாக்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.