ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திருச்சியில் நேற்று (நவ 19) செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், "சங்க நிர்வாகிகளை அவதூறாக பேசி வரும் விஷால் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்" என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள விஷால் "சங்கத்திலிருந்து வெளியேறத் தயார்" என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஷால் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அளித்துள்ளதாக வந்திருக்கும் பேட்டிகளும், பேச்சுக்களும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. நான் நடிகர் சங்கத்தை மதிக்கிறவன். சங்கம் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். என்னை வெளியேற்ற முடிவெடுத்தால் வெளியேறவும் தயார். ஆனால் நான் அதற்கு முன் ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். நான் சங்கத்துக்கு எதிராக, சங்க நிர்வாகிகளை அவதூறாக பேசியதாக கூறும் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.
ஒரு நடிகனாக மிகவும் வேதனைப்படுகிறேன். சங்கத்தின் செயலாளர் ராதாரவியும், துணை தலைவர் கே.என்.காளையும் நடிகர்களை நாய்கள் என்று விமர்சித்துள்ளார்கள். சங்கத்தின் விதி 13ன் படி சங்க உறுப்பினர்களை யார் தரக்குறைவாக, கன்னியக்குறைவாக பேசினாலும் அது தண்டனைக்குரிய குற்றம். அதன்படிதான் குமரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல ராதாரவி மீதும், கே.என்.காளை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயம் எல்லோருக்கும் பொதுவானது. சங்க நிர்வாகிகளுக்கு தனி நியாயம், உறுப்பினர்களுக்கு தனி நியாயம் எதுவும் கிடையாது.
இவ்வாறு விஷால் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.