ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்துள்ள லிங்கா படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் கதையை, கர்நாடகத்தைச் சேர்ந்த பொன்.குமார் எழுதியுள்ளார். லிங்கா படப்பிடிப்புகள் முடிந்து டிசம்பர் மாதம் வெளியிட தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையொட்டி இயக்குனர் ரவிகுமார், கதாசிரியர் பொன்குமார் உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட பலருக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இதைத் தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கோர்ட்டில் இதுபற்றி விளக்கம் அளித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: லிங்கா படத்தின் கதையும், மனுதாரரின் கதையும் முல்லை பெரியாறு அணை பிரச்சினையை மையமாக கொண்டது என்று கருதிக் கொண்டு லிங்கா படத்தின் கதை என்னுடையது என்று சொல்கிறார். இதுவரை வெளியிடப்பட்ட டிரைய்லர் காட்சிகளை வைத்துக் கொண்டு கதை தன்னுடையது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. அப்படியே பென்னி குக்கின் கதையாக இருந்தாலும் அதற்கு யாரும் உரிமை கோர முடியாது. படத்தின் கதை யாருக்கும் தெரியாது. இதுவரை யூகத்தின் அடிப்படையில்தான் கதைகளை பேசி வருகிறார்கள்.
லிங்கா படத்தின் கதையை கதாசிரியர் பொன்குமார் கிங்கான் என்ற பெயரில் எழுதி அதனை 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந் தேதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார். எனவே லிங்கா கதைக்கு உரிமை கோரும் மனுவை தள்ளுபடி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோன்ற ஒரு பதில் மனுவை கதாசிரியர் பொன்குமாரும் தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை இன்று (நவ 19) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.