ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருட்டு விசிடி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருகி விட்டது. திரையுலகமும் அதனை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கி விட்டது. திரைப்படத்துறையில் உள்ள எல்லா அமைப்புகளும் சேர்ந்து கூட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூடிய இந்த கூட்டமைப்பில் வருகிற டிசம்பர் 2ந் தேதி திரையுலகினர் கலந்து கொள்ளும் பிரமாண்ட பேரணி நடத்தி அதன் முடிவில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை இப்போதே தொடங்கிவிட்டார்கள். போலீஸ் கமிஷரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மெரீனா பீச் அல்லது தீவுதிடலில் இருந்து பேரணி புறப்பட்டு கோட்டை நோக்கி செல்வதாக இப்போதைய திட்டம். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் திறந்த வேனில் வர, மற்றவர்கள் நடந்து செல்ல பேரணி நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
திருட்டு விசிடியால் திரையுலகம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருட்டு விசிடி குற்றவாளிகளுக்கு குண்டர் சட்டம் கொண்ட வந்த அரசை பாராட்டியும். திருட்டு விசிடி பார்க்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டும் பேனர்கள் அமைக்கப்படுகிறது. பெப்சியில் உள்ள 24 கிளை சங்கங்கள், இயக்குனர் சங்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகியவை தனித்தனி பேனர்களின் கீழ் அணிவகுத்து வர இருக்கிறார்கள்.
பேரணியில் கலந்து கொள்ள அனைத்து நடிகர்களின் ரசிகர் மன்றத்திற்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இதனால் பேரணியில் 2 லட்சம் பேர் வரை கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேரணி முடிவில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் என்கிற வீதம் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கிறார்கள். இந்த பேரணியை ரஜினி துவக்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.