சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாரீசன் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பிரமாண்ட அரண்மனை செட்டில் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முதல்கட்டமாக விஜய்-ஹன்சிகா இடம்பெறும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அதையடுத்து, இன்னொரு பாடலில் ஸ்ரீதேவி, ஹன்சிகா, சுதீப் ஆகியோர் நட்னமாடுவது போன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம்.
இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்ட பிறகு வசன காட்சிகளுக்கு செல்கிறாராம் சிம்புதேவன். சரித்திர பின்னணி கதை என்பதால் அதிகப்படியான நடிகர்-நடிகைகள் இடம்பெற்றுள்ள நிலையில், அனைவரையும் ஸ்பாட்டில் வைத்துக்கொண்டே அடுத்தடுத்த காட்சிகளை நகர்த்துகிறார்களாம். அதனால் த்றபோதைய நிலவரப்படி ஸ்ருதிஹாசன் தவிர அப்படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருமே அந்த அரண்மனை செட்டில் இருக்கிறார்களாம்.
மேலும், பெரிய பட்ஜெட் படம் என்பதோடு, பாடல் காட்சிகளில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கு பெற்று திருவிழாக்கோலம் பூண்டதால் மொத்தம் மூன்று கேமராக்களை வைத்து மூன்று யூனிட் ஒர்க் பண்ணிக்கொண்டிருக்கிறதாம். இந்த யூனிட்டுகள் பாடல் காடசி மட்டுமின்றி, அடுத்தபடியாக தொடரவிருக்கும் வசன காட்சிகளிலும் இடம்பெறுகிறதாம்.ஆக, இன்னும் 50 நாட்கள் வரை இதே யூனிட்கள் அந்த ஸ்பாட்டில் வேலை செய்யப்போகிறார்களாம்.