ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் திரைப்பட கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகர் விஷால் பேசியதாவது: திருட்டு விசிடியை ஒழிக்க நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நான் கடைகளுக்கு, கேபிள் டி.வி அலுவலகங்களுக்கு சென்று பிடித்தது சட்டத்திற்கு உட்பட்டுத்தான். திருட்டு விசிடி விற்கப்படுவதை அறிந்தவுடன் முதலில் போலீசுக்கும் பிறகு பத்திரிகைகளுக்கும் தகவல் சொல்லிவிட்டுதான் சென்றேன். எல்லா இடத்திலும் போலீசார் முன்னிலையில்தான் நடந்தது. இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. எந்த வகையிலும் நானே சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்பட வில்லை.
நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இருப்பதால் எனக்கு அந்த கடமையும், பொறுப்பும் இருக்கிறது. திருட்டு விசிடியை ஒழிக்க நடிகர்கள் தயாராக இருக்கிறோம். எல்லா நடிகர்களிடமும் நான் பேசியிருக்கிறேன். உங்களுக்கு துணையாக நடிகர்கள் இருப்பார்கள். அவர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு விஷால் பேசினார்.
நடிகர் பார்த்திபன் பேசும்போது, "திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு பேசிக் கொண்டேதான் இருக்கிறோம். முன்பு நான் தயாரிப்பாளர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தேன். இப்போது தெருவில் இறங்கி அடிக்கிறேன். போராட்டம்தான் மாறி இருக்கிறதே தவிர திருட்டு விசிடி ஒழியவில்லை. திரைப்படத்திற்கு முன்பு புகையிலை தடுப்பு விளம்பரம் திரையிடுவதை போல நடிகர் நடிகைள் திருட்ட விசிடி பார்க்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் படத்தை திரையிட வேண்டும்" என்றார்.