ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவில் நடிக்கும் ஹீரோக்கள் இரண்டு வகைப்படுவர். டைரக்டர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடிப்பது. ஒரு வகை, டைரக்டர்களே சொன்னாலும் தங்கள் கருத்தையும் அதில் திணித்து அதற்கேற்ப நடிப்பது இன்னொரு வகை. இதில் சரத்குமார் முதல் வகையைச்சேர்ந்தவர். டைரக்டர்கள் என்ன பீல் பண்ணியிருக்கிறார்களோ அதன்படியே நடிக்க வேண்டும் என்று நினைப்பவர்.
அந்த வகையில், அவர் புலன்விசாரணையில் வில்லனாக அறிமுகமானதில இருந்து இப்போது சண்டமாருதம் படத்தில் நடிப்பது வரை சரத்குமார் என்றால் டைரக்டர்களின் நடிகர் என்கிற ஒரு கருத்து கோடம்பாக்கத்தில் நிலவி வருகிறது. அதிலும் சமீபகாலமாக தனது ஹீரோ இமேஜக்கு பாதகமான சூழ்நிலை நிலவி வருவதை அடுத்து ஏ.வெங்கடேஷ் இயக்கும் சண்டமாருதம் படத்தில் நடிக்கும் சரத்குமார், ஒவ்வொரு டேக்கையும் எத்தனை முறை கேட்டாலும் சளைக்காமல் நடித்துக்கொடுக்கிறாராம்.
சில கடினமான காட்சிகளை பல டேக் எடுத்து ஓ.கே செய்த பிறகு மீண்டும் அந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னாலும், எந்த முகசுழிப்பையும் காட்டாமல் அடுத்த நிமிடமே கேமரா முன்பு சென்று விடுகிறாராம். சரத்குமாரின் இந்த ஆர்வத்தை பார்த்த டைரக்டர் வெங்கடேஷ், எல்லோரும் ஆரம்ப காலததில்தான் இப்படி இருப்பார்கள. ஆனால், சரத்குமார் சினிமாவில் நடிக்க வந்து 25 வருடங்களுக்கு பிறகும் இப்படி இருப்பது பெரிய ஆச்சர்யமாக உள்ளது என்கிறார்.