ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நேற்று (நவ 14) குழந்தைகள் தினத்தையட்டி டெல்லியில் குழந்தைகள் திரைப்பட விழா தொடங்கியது. வருகிற 17ந் தேதி வரை நடக்கும் இந்த விழாவை மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி துவக்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா பேசியதாவது:
நான் ஒரு சினிமா ரசிகை என்பது பலருக்குத் தெரியாது. சின்ன வயதிலிருந்தே நிறைய சினிமா பார்த்து வருகிறேன். சினிமாவை பார்த்து என் வாழ்க்கையில் சில மாறுதல்களை செய்திருக்கிறேன். சினிமா மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அனுமதி கேட்டு பலர் வந்தனர். இந்த நிமிடம் வரை யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. என் அந்தரங்கம் பற்றி மற்றவர்கள் அறிய வேண்டியதில்லை என்று கருதுகிறேன். என் தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
எனது இந்த நிலைப்பாட்டில் பிற்காலத்தில் மாறுதல் வரலாம். எனது வாழ்க்கையை சினிமாவாக எடுக்க நான் அனுமதிக்கலாம். அப்படி ஒரு சூழ்நிலைவரும் பட்சத்தில் எனது கேரக்டரில் தீபிகாதான் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்தான் அதற்கு பொருத்தமானவர்.