ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை கதையே இல்லாமல் இயக்கி வெற்றி பெற்றார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இப்போது அடுத்த படத்தில் கதை இருக்கு என்கிறார். படத்தின் டைட்டிலே "கதை இருக்கு" என்பதுதான். இது க.தி.வ.இ படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்கிறார்கள். முதலில் படத்துக்கு உப்புமா படம் என்று தலைப்பு வைத்திருந்தார். இப்போது கதை இருக்கு என்று மாற்றி இருக்கிறார்.
"கதையில்லாமல் படம் எடுத்து காட்டியாச்சு. கதையோடு ஒரு படத்தை எடுக்க முடிவு பண்ணியிருக்கேன். கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் தொடர்ச்சியாகவும் இதை கருதலாம். அதில் நடித்தவர்களும் இதில் நடிக்கலாம் எதையும் முடிவு செய்யவில்லை. ஸ்கிரிப்ட் உருவாக்கும் பணியியில் தீவிரமாக இருக்கிறேன்" என்கிறார் பார்த்திபன்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் துணை இயக்குனர்கள் சிலர் படத்துக்காக கதை விவாதம் நடத்துவார்கள். இந்தப் படத்தில் கதையை உருவாக்கி விட்டு அதை படம் எடுக்க எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறார்கள் என்கிற கதையாம். யார் நடிக்கிறார்களோ இல்லையோ அகிலா கிஷோர் கண்டிப்பாக நடிப்பார் என்கிறார்கள்.