ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா.
வாலி வெற்றியைத் தொடர்ந்து குஷி, நியூ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களின் வரிசையில் இடம்பிடித்த நிலையில், இனி மற்ற ஹீரோக்களை வைத்து படங்களை இயக்க மாட்டேன். நான் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்குவேன் என்று அறிவித்தார்.
அதன்படி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஒரு படமும் கைகொடுக்கவில்லை.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக, ஹீரோ ஆசையில் இயக்குநர் நாற்காலியையும் பறிகொடுத்தார்.
அதனால் திரையுலகிலிருந்து காணாமல் போனவர், பெரும் போராட்டத்துக்குப் பிறகு இசை என்ற படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்தார். சுமார் இரண்டு வருடங்களாக இப்படம் தயாரிப்புநிலையில் இருந்து வருகிறது.
இசை படத்தை முடித்து ரிலீஸ் செய்யும் வேலையில் தற்போது முழுமூச்சாக இறங்கி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஏறக்குறைய பட பணிகள் நிறைவடைந்தவிட்டது.
வரும் நவம்பர் 16 அன்று இசை படத்தின் இசைவெளியீட்டுவிழா நடைபெற இருக்கிறது.
இசை படத்தின் இசையை விஜய் வெளியிட தனுஷ் பெற்றுக் கொள்கிறார்.