ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வயதிலும் இளமை துடிப்போடு நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் பாபநாசம், உத்தமவில்லன் படங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. விஸ்வரூபம்-2 படத்தில் மட்டும் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், இந்த மூன்று படங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், திப்பு சுல்தானின் வாழ்க்கையை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் கமல்ஹாசனே, திப்பு சுல்தான்-ஆக நடிக்கவும் செய்கிறாராம், கூடவே இப்படத்தை அவரே தயாரிக்கவும் இருப்பதாகவும், இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகளை கமல்ஹாசன் வெளியிடுவார் என தெரிகிறது.
கடந்தாண்டே, கமல்ஹாசன், திப்பு சுல்தானின் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்தார் கமல். ஆனால் விஸ்வரூபம் என அடுத்தடுத்து கமல் பல படங்களில் பிஸியானதால் இப்படத்தை இயக்கமுடியவில்லை. இப்போது மீண்டும் திப்பு சுல்தானை கையில் எடுத்து இருக்கிறார். ஏற்கனவே, 'மருதநாயம்' எனும் சரித்திர கதையை படமாக்கி பின்னர் நிதி பிரச்னையினால் கிடப்பில் போட்டார் கமல், இப்போதும் அதை உயிர்பிக்கும் முயற்சியில் தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு சரித்திர கதையை கையில் எடுத்து இருக்கிறார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.