குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
தினா படத்தில் இடம் பெற்ற சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... உள்ளிட்ட எக்கச்சக்க ஹிட் பாடல்களை எழுதியிருப்பவர் விஜய்சாகர். அவர் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் படம் முள்ளும் மலரும். நாயகனாக சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து பெண்களின் மனதை கொள்ளையடித்த பிரஜின் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் பெண்களை கவர்ந்ததைப் போல... இந்த படத்திலும் ப்ளேபாயாகவே நடிக்கிறார் பிரஜன். படத்தில் அவருக்கு ஜோடியாக மைதிலி என்ற மலையாள பைங்கிளி அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் சூட்டிங் 75 சதவீதம் முடிந்து விட்டது. தமிழ் சினிமா இதுவரை கண்டிராத காதல் கதை இது என்று சொல்லும் பிரஜின், இப்போது இறுதிகட்ட சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.
இந்த படம் முடிந்த கையோடு டைரக்டர் இளங்கோ இயக்கத்தில் போர்வாள் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் பிரஜின். போலீஸ் அதிகாரியாக நடிப்பது பற்றி கூறுகையில், எனக்கு போலீஸ் அதிகாரியாக நடிப்பது பெருமையாக இருக்கிறது. எனது அப்பா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்பதால் போலீஸ் அதிகாரியின் பாடி லாங்குவேஜ் நன்றாகவே தெரியும். அம்மாவும் போலீஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் சின்ன வயதில் இருந்தே போலீஸ் கனவு உண்டு. போலீசாகத்தான் ஆக முடியவில்லை. போலீஸ் கேரக்டராகவாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது, என்றார். படத்தில் ஹென்றி என்ற புதுமுகமும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷனை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இப்படத்தில் இடம்பெறும் பாடல்களை ஹரிஹரன், கார்த்திக், கிருஷ்ணா ஐயர், சிலோன் மனோகர் உள்ளிட்ட பிரபல பின்னணி பாடகர்கள் பாடப் போகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.