சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பிரபல நாட்டிய கலைஞர் கிருத்திகாவின் நமார்கம் டான்ஸ் கம்பெனியும், நடிகை சுஹாசினியின் டேலண்ட் சவுத் நிறுவனமும் இணைந்து அந்தரம் என்ற நாட்டிய நிகழ்ச்சியை நடத்துகிறது. இது வருகிற 28ந் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களின் பாரம்பரிய கலையான பரத நாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி ஆகியவற்றை தேவதைகளின் கதைகள் வழியாக மக்களுக்கு எளிதில் புரியும்படியாக இந்த நாட்டிய நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் கிருத்திகா சுப்பிரமணியம் பரத நாட்டியத்தையும், கோபிகா வர்மா மோகினி ஆட்டத்தையும், யாமினி ரெட்டி குச்சிப்புடி நடனத்தையும் ஆடுகிறார்கள். நடிகை சுஹாசினி நாடகம் மற்றும் நடன பாணியில் கர்நாட மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் கோல் குப்பஸ் பகுதியை சேர்ந்த இப்போதும் கொண்டாடப்படுகிற ரம்பா என்ற நடனப்பெண்ணின் கதையை நாட்டிய நாடகமாக நடிக்கிறார்.
இதற்கான பாடல்களை அருண், ராஜ்குமார், மற்றும் சுஹாசினி எழுதி உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார், ஜெயேந்திரன் இயக்கி உள்ளார்.