ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் சந்தானம்தான் பிரதான காமெடியன். அந்த படம் வெற்றி பெறாதபோதும் சந்தானத்தின் காமெடிக்காக சில நாட்கள் ஓடியது. அதையடுத்து மதகஜராஜா படத்திலும் சந்தானம் இடம்பெற்றார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் கிடப்பில் கிடக்கிறது.இந்த நிலையில், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள படத்திலும் நடிக்கிறார் சந்தானம்.
விஷாலைப் பொறுத்தவரை சந்தானத்தை தனது பிரதான காமெடியனாக நினைக்கவில்லை என்றபோதும், சுந்தர்.சியோ அவரை தனது செண்டிமென்ட் நடிகராக நினைக்கிறார். காரணம், தனது இயக்கத்தில் சந்தானம் நடித்த கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் என்பதால் எனக்கு சந்தானம் கண்டிப்பாக தேவை என்று சொல்லி ஆம்பள படத்திலும் அவரை நடிக்க வைக்கிறாராம்.
அதோடு, எனது படங்களில நடிப்பதற்கு சந்தானம் கதையும் கேட்பதில்லை. காசும் கேட்பதில்லை. நான் என்ன ரோல் கொடுத்தாலும் நடிப்பார், என்ன காசு கொடுத்தாலும் எண்ணிப்பார்க்காமல் வாங்கிக்கொள்வார். அந்த அளவுக்கு , கலைக்கும், கலைஞனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் சந்தானம் என்று கூறும் சுந்தர்.சி., இந்த ஆம்பள படத்திற்கு சநதானத்திடம் கால்சீட் கேட்டபோது ரஜினி சாரின் லிங்கா படத்திற்கு மொத்த கால்சீட் கொடுத்து விட்டேன் என்று கை விரித்து விட்டாராம். இருப்பினும், சந்தானம் எப்போது கால்சீட் தருகிறாரோ அப்போது காமெடி காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் சுந்தர்.சி.,