ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார் இளையராஜா. மேலும், இப்போதும் தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்திப்படங்களுக்கும் பிசியாக இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.அந்த வகையில் தமிழில் மட்டும் ராஜ ராஜனின் போர்வாள், தாரை தப்பட்டை, போர்க்களத்தில் ஒரு பூ, மூங்கில் காடு, கிடா பூசாரி மகுடி. டூரிங் டாக்கீஸ் மற்றும் மகேந்திரனின் படம் உள்பட 10 படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். தவிர, அமிதாப்பச்சன், தனுஷ் நடிக்கும் ஷமிதாப் மற்றும் சில கன்னட, தெலுங்கு படங்கள் என இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், முன்பு மாதிரி எந்த படமாக இருந்தாலும், கதையை கேட்டதுமே அவர் இசையமைக்க சம்மதம் சொல்வதில்லையாம். அவர்கள் படமாக்கிய வசன காட்சிகளை திரையில் போட்டு பார்த்த பின்னரே அந்த படங்களுக்கு இசையமைப்பதா? வேண்டாமா? என்பதை முடிவெடுக்கிறாராம். இதற்கு காரணம் சில புதுமுக டைரக்டர்களின் படங்களுக்கு இசையமைத்தபோது அதன் காட்சிகள் சரியாக படமாக்கப்படவில்லையாம்.
முக்கியாக, அவருக்கு பின்னணி இசையமைக்க போதுமான இடம் கொடுக்காத அளவுக்கு காட்சிகளில் வசனங்கள் பேசப்பட்டிருந்ததாம். அதெல்லாம் புதுமுக டைரக்டர்களின் படங்களாம். அதனால் இப்போது சில முன்னணி டைரக்டர்களை தவிர, புதியவர்களாக இருந்தால், அவர்களிடம் முதலில் வசன காட்சிகளை படமாக்கி விட்டு வாருங்கள். அதைப்பார்த்து விட்டுத்தான் உங்கள் படங்களுக்கு இசையமைப்பது பற்றி என்னால் முடிவு சொல்ல முடியும் என்று கூறி விடுகிறாராம்.
இது சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவர் நன்றாக படமாக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்படி சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ளும் இயக்குனர்கள் இளையராஜாவின் இந்த புதிய கொள்கையை வரவேற்றுள்ளனர்.