ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், அசல் என ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் பரத்வாஜ். தற்போதும் சில படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார். மேலும், வெளிநாடுகளிலும் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் பரத்வாஜ், வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கிறார்.
அப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரான்சில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தாராம். அப்போது, இவரை மேடைக்கு அழைத்தபோது இருக்கையில் இருந்து எழுந்து சென்றிருக்கிறார். ஆனால், அந்த நேரம் பார்த்து மேடையில் புகை மண்டலத்தை எழுப்பியிருக்கிறார்ள். ஆனால் அந்த புகையை சுவாசித்த பரத்வாஜ்க்கு மயக்கம் வந்து விட்டதாம். மூச்சு விட முடியாமல் தடுமாறினாராம்.
அதனால் அப்படியே அமர்ந்து விட்டாராம். அதையடுத்து புகை இல்லாத இடத்துக்கு அவரை அழைத்து சென்று சிறிது நேரம உட்கார வைத்து மயக்கம் தெளிந்த பிறகு மேடைக்கு கூட்டி வந்தார்களாம். இந்த எதிர்பாராத சம்பவத்தினால் பலத்த அதிர்ச்சியடைந்த பரத்வாஜ், பின்னர் ஓரளவு மயக்கம் தெளிந்ததும், மேடையில் தோன்றி மைக் பிடித்து பேசினாராம்.