ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டைரக்டர் சரண் இயக்கிய முதல்படமான காதல் மன்னனில் அவருடன் கை கோர்த்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். அஜீத் நடித்த இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானதால், அதன்பிறகு சரண் இயக்கிய அனைத்து படங்களிலுமே பரத்வாஜ் இடம்பெற்று ராசியான கூட்டணியாக வலம் வந்தார்கள்.
அந்த வகையில், அதையடுத்து அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி என அசல் படம் வரை சரண்-பரத்வாஜியின் கூட்டணி தொடர்ந்தது. ஆனால், பின்னர் சரணுக்கு படங்கள் இல்லாததால் வேறு படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார் பரத்வாஜ். இருப்பினும் அப்படி அவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் ஹிட்டாகவில்லை. அதனால் மார்க்கெட்டில் பின்தங்கினார்.
இந்த நிலையில், நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சரண் இயக்கி வரும் ஆயிரத்தில் இருவர் படத்தில் தற்போது அவருடன் கைகோர்ததிருக்கிறார். இதனால் பரத்வாஜின் இசைக்கூடாரத்தில் மீண்டும் பரபரப்பு கூடியிருக்கிறது. குறிப்பாக, இந்த படத்திற்கு கமிட்டான பிறகு அவர் இசையமைத்து வெளியான அரண்மனை படத்தின் பாடல்களும் பேசப்பட்டதால் மீண்டும் சில இயக்குனர்கள் பரத்வாஜ் பக்கம் திரும்பி நிற்கின்றனர். அதனால் தற்போது ஆயிரத்தில் இருவர், அழகிய பாண்டிபுரம் போன்ற படங்கள் இருக்க, மேலும் சில படங்களில் இசையமைப்பது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் பரத்வாஜ்.
ஆக, பரத்வாஜ் மீண்டும் ஓ போடுவாரா -என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.