ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த சில நாட்களாகவே யுவன்சங்கர்ராஜாவின் 3வது திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் உலாவி வருகின்றன. இஸ்லாம் மதத்துக்குக்கு மாறிய, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய பெயரை முகமது காலீக் என்று மாற்றிக் கொண்டதாகவும், விரைவில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், யுவன் 3வது திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதுகுறித்து யுவன் தரப்பிலிருந்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. அதேநேரம், யுவன் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில் அவரின் சகோதரியும், பாடகியுமான பவதாரிணி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
ஆமாம்... என் சகோதரர் யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். நான், கார்த்திக் ராஜா, அப்பா அனைவருமே யுவனின் அந்த முடிவை ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆமாம்.... அவர் 3வது முறையாக திருமணம் செய்யவிருக்கிறார். ஏனென்றால், அவர் ஏற்கெனவே செய்து கொண்ட இரண்டு திருமணங்களும் ஒருசில தனிப்பட்ட காரணங்களால் அவருக்கு ஒத்து வரவில்லை. யுவனுக்கு குழந்தைகளும் இல்லை, யாரையும் அவர் ஏமாற்றவும் இல்லை. அவர் குடிப்பதோ, புகைப்பதோ கிடையாது. 15 வயதிலிருந்தே இசையமைத்துக் கொண்டிருக்கும் யுவன், எப்போதும் அப்பாவின் இசையைப் பின்பற்றியதே கிடையாது. அவருக்கென தனியாக ஒரு ஸ்டைலை ஏற்படுத்திக் கொண்டு, அதில் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கடினமான உழைப்பினால் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் இப்போது வெற்றிகரமான இசையமைப்பாளராக இருக்கிறார். அவருடைய குடும்ப உறுப்பினர்களாலேயே யுவன் விமர்சிக்கப்படுவதைப் பார்க்கும்போது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. அவர் தன்னை நிரூபித்திருக்கிறார், இனிமேலும் நிரூபிப்பார், தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருப்பார். எல்லாவற்றையும் விட மனிதமே முக்கியமானது. யுவன் நல்ல மனிதரே!
என்று அதில் செம காட்டமாகவே ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் பவதாரணி.