ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹாரர் படங்கள் மூலம் செமத்தியாய் லாபம் பார்த்தது யார் என்றால் ராமநாராயணனின் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம்தான்.
காஞ்சனா, அருந்ததி, அரண்மனை என்று இவர்கள் வாங்கி வெளியிட்ட ஹாரர் படங்கள் அனைத்தும் பல கோடிகளை வசூல் செய்து கொடுத்தன.
ராமநாராயணன் இறந்த பிறகு அவரது புதல்வர்கள் நிர்வகித்து வரும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் கடந்த சில வருடங்களாக படத்தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது.
கடைசியாய் ஆர்யா சூர்யா என்ற படத்தைத் தயாரித்து கையை சுட்டுக் கொண்டதால் படங்களைத் தயாரிக்காமல் இருந்தது.
தற்போது மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கி உள்ளது.
ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தை தொடர்ந்து கருணாநிதியின் பேரன் அருள்நிதி நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்.
இப்படத்தை தொடர்ந்து டிமான்டி காலனி என்ற புதிய படத்தில் நடிக்கிறார் அருள்நிதி.
சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் டிமான்டி காலனியின் பெயரில் உருவாகும் இப்படம் ஹாரர் படமாக உருவாகவிருக்கிறதாம்.
இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் சார்பில் ராதா ராமநாராயணன் தயாரிக்க, ஆர்.அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
கிட்டார் இசை கலைஞரான கெபா ஜெர்மியா என்பவர் இப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகவிருக்கிறார்.