விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
நயன்தாராவுக்கு, தற்போது ஆக் ஷன் கதை களத்தை கொண்ட படங்கள் தான் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், அவரின் கவனமோ சரித்திர கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. 'ராணி ருத்ரம்மா தேவி', 'பாகுபாலி' படங்களில் அனுஷ்கா நடித்து வருவதை சுட்டிக்காட்டி, அதுபோன்ற வேடங்களில் நானும் நடிக்க விரும்புகிறேன் என்றும், சில இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார் நயன்தாரா.அதோடு, 'ஸ்ரீராமராஜ்ஜியம்' தெலுங்கு படத்தில் சீதை வேடத்திற்காக தான் நந்தி விருது பெற்றதை, அவர்களுக்கு நினைவுபடுத்தும் நயன்தாரா, சினிமாவுக்காக கடுமையாக உழைக்கவும், ரிஸ்க் எடுக்கவும், நான் தயாராகி விட்டேன் என்றும் கூறிவருகிறார். அதனால் கூடிய சீக்கிரமே, சரித்திர படங்களில் நடிப்பதில் அனுஷ்காவுக்கு போட்டி நடிகையாக, நயன்தாராவும் உருவெடுப்பார் என்று தெரிகிறது.