ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கியுள்ள படம் காவியத் தலைவன். இது நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. வருகிற நவம்பர் 14ந் தேதி ரிலீசாகிறது. படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அதில் ஒன்று ரோட் ஷோ நடத்துவது. படத்தின் கதையில் நாடக கலைஞர்கள் தங்கள் நாடகத்தை விளம்பரப்படுத்த நாடகத்தில் போடும் வேஷங்களை கட்டி வாகனத்தில் ஊர் ஊராக செல்வார்கள்.
அதே பாணியில் பட ரிலீசின் போது சித்தார்த், பிருத்விராஜ், அனைகா, வேதிகா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் ஊர் ஊராக சென்று ரோட் ஷோ நடத்த இருக்கிறார்கள். இதுதவிர அந்தந்த ஊரில் உள்ள இளைஞர்களை நடிக்க வைத்து அவர்களில் நன்றாக நடிப்பவர்களுக்கு பரிசும் வழங்க இருக்கிறார்கள்.
இந்த தகவலை இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: சங்கராபரணம், சலங்கை ஒலி, சிந்து பைரவி, சிப்பிக்குள் முத்து போன்று இது ஒரு இசைப் படம். சங்கரதாஸ் சுவாமிகள், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களோடு கற்பனை கதையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.