ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அம்மா உணவகம், அம்மா குடிநீர், போன்று அம்மா திரையரங்குகள் கட்டப்பட்டு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் புதிய படங்களை பார்க்க வசதி செய்யப்படும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது சென்னை மாநகராட்சி அம்மா திரையரங்கம் கட்ட 5 இடங்களை தேர்வு செய்துள்ளது.
1.புளிந்தோப்பில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய மண்டல அலுவலகம்
2.மிண்ட் பகுதியில் மாநகராட்சி கிடங்கு இருந்த பகுதி
3.வளசரவாக்கத்தில் குடிநீர் வாரிய பம்பு செட் அருகில் உள்ள பகுதி
4.கோடம்பாக்கத்தில் மாநராட்சிக்கு சொந்தமான யூனிட் இருந்த பகுதி
5.கோட்டூர்புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம்.
"தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் 2 ஏக்கர் முதல் 8 ஏக்கர் வரை இடம் கிடைத்துள்ளது. ஒவ்வொரு இடத்திலும் 4 முதல் 8 தியேட்டர்கள் வரை கட்டப்படுகிறது. ஒவ்வொன்றும் 200 முதல் 250 இருக்கைகள் கொண்டதாக இருக்கும். இன்னும் ஓரிரு மாதங்களில் கட்டுமான பணி தொடங்கும், அடுத்த ஆண்டு ஜுன் மாத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்படும்" என்று மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.