ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நிமிர்ந்துநில் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி தற்போது கிட்ணா என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
இப்படத்தில் முதலில் அமலாபால் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது. நிமிர்ந்து நில் படப்பிடிப்பின்போது ஒருநாள், சமுத்திரக்கனி சொன்ன கிட்ணா கதையைக் கேட்ட அமலாபால் மிகவும் இம்ப்ரஸ்ஸாகி அப்படத்தில் நடிக்க தானே முன்வந்திருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அமலாபால் பெரிய சம்பளம் கேட்டதால் அவரை நீக்கிவிட்டு, தற்போது மகிமாவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் சமுத்திரக்கனி.
அது என்ன கிட்ணா? கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரின் சுருக்கமா?
இல்லை என்கிறார் சமுத்திரக்கனி.
கெடை ஆடு மேய்க்கிறவர்களைப் பற்றிய கதையாம்.
எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதின கீதாரி என்ற நாவலுக்கு திரைக்கதை அமைத்து கிட்ணா படத்தை இயக்கி வருகிறாராம்.
கீதாரி நாவல் இலக்கிய உலகத்தில் பரவலாக கவனிக்கப்பட்ட கதை. எனவே கீதாரியை மூலக்கதையாகக் கொண்ட கிட்ணா வர்த்தக ரீதியில் மட்டுமல்ல, சர்வதேசஅளவில் பல விருதுகளையும் பெறும் என்கிறார்கள் கிட்ணா படக்குழுவினர்.