14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய 'நெஞ்சிருக்கும் வரை' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூனம் கவுர். தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்', விஷால் நடித்த 'வெடி', ஷாம் நடித்த '6 மெழுகுவர்த்திகள்', உட்பட சில படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது சில தமிழ்ப் படங்களிலும், தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஸ்ரீதேவி' என்ற சர்ச்சைக்குரிய படத்திலும் நடிப்பதற்காக பூனம் கவுர் அழைக்கப்பட்டிருந்தாராம்.
அவருடன் நடிப்பதற்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ள சிறுவனும் அழைக்கப்பட்டிருக்கிறான். அந்தச் சிறுவனுடன்தான் நடிக்க வேண்டும் என்றவுடன் பூனம் கவுர் அதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். நான் எப்படி அந்தச் சிறுவனுடன் நடிப்பது என்று மறுத்திருக்கிறார். அதன் பின் அந்தப் படத்திலிருந்து நடிக்காமல் வெளியேறிவிட்டாராம். முதலில் 'ஸ்ரீதேவி' படத்தில் நடிக்க சம்மதித்துவிட்டு எப்படிப்பட்ட காட்சி என்று தெரிந்ததும் பூனம் அதில் நடிக்காமல் விலகியது குறித்தும்தான் டோலிவுட்டில் பேச்சாக இருக்கிறதாம். ராம்கோபால் வர்மா படத்திலேயே ஒரு நடிகை இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறாரே என்று நிறைய பேர் பூனம் கவுரைப் பாராட்டி வருகிறார்களாம்.
ஆனால், படத்தில் நாயகியாக அனுஷ்கிருதி என்பவர்தான் நடித்து வருகிறாராம். வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க பூனம் கவுர் வந்த போதுதான் மேற்கண்ட சம்பவம் நடந்ததாகவும் சொல்கிறார்கள்.