ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் தொடங்கி, நட்புக்காக, குஷி, ரன், பாய்ஸ், கில்லி, சிவகாசி என பல வெற்றி படங்களை தயாரித்தவர் ஏ.எம். ரத்னம். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் தயாரித்த கேடி, தர்மபுரி, பீமா போன்ற படங்கள அடுத்தத்து தோல்வியாக அமைந்ததால், கடன்பட்ட அவர், பின்னர் 5 ஆண்டுகளாக படமே தயாரிக்க முடியாத நிலையில் இருந்தார்.
அதன்காரணமாக, முன்னணி ஹீரோக்கள் யாருமே அவருக்கு கால்சீட் கொடுக்க முன்வரவில்லை.ஆனால் அஜீத் மட்டும்தான் அவருக்கு படம் நடித்து தர முன்வந்தார். அதையடுத்துதான் விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படம் உருவானது. அந்த படம் நல்ல வசூலை கொடுத்ததால் ஓரளவு எனது கடனை இந்த படம் மூலம் அடைத்துவிட்டேன் என்று அப்போது கூறியிருந்தார் ஏ.எம்.ரத்னம்.
அதையடுத்து உங்களுக்கு மீண்டும் ஒரு படத்தில் நடித்துத் தருகிறேன். மீதமிருக்கும கடனையும அடைத்து விடுங்கள் என்று சொல்லி, இப்போது கெளதம்மேனன் இயக்கும் படத்தையும் ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவீசுக்காக நடித்துக் கொண்டிருக்கிறார் அஜீத்.
இந்தநிலையில், இதன்பிறகு வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார் அஜீத. அதோடு, அப்படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயாரிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள டைரக்டர் சிவா, படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் முடிவடைந்து விட்ட நிலையில், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.