ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காதல் 2014 படத்தையடுத்து, அன்னை புதுமை மாதா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ஆர்.எல்.யேசுதாஸ் ஆர்.ஒய்.ஆல்வின், ஆர்.ஒய்கெவின் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ விந்தை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். நண்பர்கள் கவனத்திற்கு என்ற படத்தில் நாயகியாக நடித்தவர். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, சிசர்மனோகர், டெலிபோன் ராஜ், நெல்லைசிவா, டி.ரவி, கவுதமி, செந்தி ஜெகநாதன், ஐசக், ஆதேஷ், சிவநாராயணமூர்த்தி, சுமதி, தவசி, சுப்புராஜ் நடிக்கிறார்கள்.
இப்படம் இயக்குநர் லாரா கூறும்போது, ஊரைவிட்டு ஓடி வந்த இளம் காதலர்களான மகேந்திரன் - மனிஷாஜித் இருவரும் சென்னை வருகிறார்கள். சந்தேகத்தின் பெயரில் போலீஸ் அவர்களை கைது செய்கிறார்கள். 24 மணி நேரம் காவல் நிலையத்தில் அவர்கள் சந்திக்கும் சுவாரஸ்யம் மற்றும் திகில் ஆகியவற்றை கலந்து முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கி வருகிறோம். இதற்காக சென்னையில் காவல் நிலைய அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு படமாக்கப்படுகிறது. மிகக் குறுகிய கால தயாரிப்பாக விந்தை உருவாகிறது என்றார்.