ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹுட் ஹுட் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர பல்வேறு விதங்களில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. ஏற்கெனவே பெரும்பாலான தெலுங்கு நடிகர்களும், சில தமிழ் நடிகர்களும் நிவாரண உதவி வழங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெலுங்குத் திரையுலகினர் நவம்பர் 9ம் தேதி 'வி லவ் வைசாக்' என்ற மாபெரும் நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். தெலுங்கு நடிகர்களோடு தமிழின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற ஆர்வத்துடன் முன் வந்துள்ளார்களாம். இவர்களிருவருக்கும் தெலுங்குத் திரையுலக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட மற்ற சிலரும் நிகழ்ச்சிக்கு வருவதாக உறுதியளித்துள்ளார்கள் என தெலுங்குத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோர் மட்டுமே தமிழ்த் திரையுலகிலிருந்து ஹுட் ஹுட் புயல் நிவாரண நிதியாக பண உதவிகளை ஏற்கெனவே வழங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.