ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்பெல்லாம் சினிமா படப்பிடிப்புகள் பெரும்பாலும் சென்னையிலுள்ள கோடம்பாக்கம், வடபழனியில்தான் அதிகமாக நடைபெறும். அதனால் நடிகர்-நடிகைகள் அனைவருமே சாலிகிராமம் பகுதியில்தான் குடியிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை மாறி விட்டது. பெரும்பாலான படப்பிடிப்புகள் அவுட்டோர்களிலேயே நடைபெறுகிறது. அதன் காரணமாகத் தான் ஏவிஎம, விஜயா வாஹினி, பிரசாத் உள்ளிட்ட பிரபல ஸ்டுடியோகளெல்லாம் வணிக வளாகங்களாகிக் கொண்டிருக்கின்றன.
அதோடு, சென்னையிலுள்ள ஈசிஆர் சாலை கடற்கரையை ஒட்டி அமைந்திருப்பதால் நடிகர் நடிகைகள் அந்த ஏரியாவில் குடியிருப்பதைத்தான் விரும்புகிறார்கள். அதனால் அனைத்து முன்னணி நடிகர்களும் அங்கு பங்களா கட்டி குடியேறி விட்டனர். அதையடுத்து, இப்போது ஈசிஆர் சாலையில் சுமார் 25 ஏக்கரில் ஆதித்யாராம் என்ற பெயரில் ஒரு அதிநவீன ஸ்டுடியோ கட்டப்பட்டுள்ளது.
கமலின் தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களின் செட் இந்த இடத்தில்தான் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், தற்போது இந்த புதிய ஸ்டுடியோவில்தான் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பிரம்மாண்ட அரண்மனை செட் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு சரித்திர காலத்துக்கேற்ற லொகேசனும் இந்த ஸ்டுடியோவிற்குள் அதிகமாக இருப்பதால் இங்கேயே பெரும்பகுதி படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளாராம் சிம்புதேவன்.