ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ராணி ருத்ரம்மா தேவி படத்தை முடித்து விட்ட அனுஷ்கா இப்போது பாகுபாலி படத்தில் முழுவீச்சில் இறங்கியிருக்கிறார். ஆனால் இடையினில் வந்து அவ்வப்போது ரஜினியின் லிங்கா, அஜீத்தின் 55வது படத்திலும் நடித்துக்கொடுத்தவர், இப்போது பாடல் காட்சிகளின் படப்பிடிப்புக்கு வருவதற்கு இழுத்தடிக்கிறாராம்.
காரணம், பாகுபாலி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாகிக்கொண்டிருப்பதால், அதில் அருந்ததி, ருத்ரம்மாதேவி படங்களில் இல்லாத அளவுக்கு அதிடியாக நடித்துக்கொண்டிருக்கிறாராம். முக்கியமாக, இந்த காட்சிகளில ஒரு இரவு, ஒரு பகல் என இடைவிடாமல் நடிக்கிறாராம். அந்த காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்கு காஸ்டியூம் மற்றும் மேக்கப் போடுவதற்கே 4 மணி நேரத்திற்கு மேலாகே ஆகி விடுவதால். இப்படி அதிகப்படியான நேரம் படப்பிடிப்பு செல்கிறதாம். இப்படியே தொடர்ந்து படப்பிடிப்பு சென்று கொண்டிருக்கிறதாம்.
அதனால் சமீபத்தில் லிங்கா படத்தின் பாடல் காட்சியை வெளிநாட்டில் நடத்துவதற்காக அவரிடம் கால்சீட் கேட்டபோது, பாகுபாலி படப்பிடிப்பு பிசியாக சென்று கொண்டிருக்கிறது. அந்த பாடலை பெங்களூரிலேயே படமாக்கினால் எனக்கு வசதியாக இருக்குமே என்றாராம் அனுஷ்கா. அதற்கு, உங்கள் வசதிக்காக ப்ளானை மாற்ற முடியாது, வெளிநாட்டுக்கு வந்தாக வேண்டும் என்று கூறி விட்டார்களாம். தான் பிசி நடிகை என்பதால் தனக்காக வளைந்து கொடுப்பார்கள் என்று பார்த்த அனுஷ்கா அவர்கள் திட்டவட்டமாக சொல்லி விட்டதால், இப்போது தானே அவர்களுக்கு வளைந்து கொடுக்க தயாராகி விட்டார்.