ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஐ படத்தின் பாடல்கள் கடந்த மாதம் வெளியானது. அதையடுத்து, அவரது இசையில் வசந்தபாலனின் காவியத்தலைவன் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பிரஸ்மீட்டில், எனது கேரியரில் இந்த காவியத்தலைவன் முக்கியமான படம் என்று தெரிவித்தார் ரகுமான்.
அதாவது நான் ஒரு ஈரானிய இயக்குனரை சந்தித்தபோது நீங்கள் ஏன் உங்கள் நாட்டு படங்களுக்கும் உங்கள் கலாச்சார இசையை கொடுப்பதில்லை என்று கேட்டார். அப்போது எனக்கு அவரிடம் சரியான பதில் கொடுக்க முடியவில்லை. ஆனால் காவியத்தலைவன் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு வந்தபோதுதான், நாடகக்கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்கு நம்முடைய இசையை கொடுத்து, இதோ எங்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை கொண்டு இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறேன் என்பதை அவரிடம் கூற வேண்டும் என்று முடிவு செய்தேன் என்று தெரிவித்தார்.
அப்படி வெளிநாட்டவரிடம் தனது அடையாளமாக காட்டிக்கொள்ளப்போகும் காவியத்தலைவன் படத்திற்கு தற்போது பின்னணி இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், ஷங்கரின் ஐ படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளிலும் ஈடுபட்டிருக்கிறார். இதற்கிடையே ரஜினியின் லிங்கா படத்திற்கான பாடல்களுக்கும் இசையமைத்து கொடுத்து வருகிறார்.
இதில் காவியத்தலைவன் நவம்பர் 14-ந்தேதி திரைக்கு வர இருப்பதாக இப்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அதே தேதியில் ரஜினியின் லிங்கா படத்தின் ஆடியோ வெளியீடடு விழாவும் நடக்கிறதாம். இதனால் ரகுமானின் இசைக்கூடாரம் எப்போதும் பிசியாகவே காணப்படுகிறது.