ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது குடும்பத்துடனும், தனது தற்போதைய நண்பர் ரன்வீர் சிங்குடனும் தீபாவளியை கொண்டாடி உள்ள தீபிகா படுகோனே, தனது பழைய மற்றும் தற்போதைய உறவுகள் பற்றி வெளிப்படையான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தீபிகாவோடு கிசுகிசுக்கப்பட்ட ரன்பீர் கபூர் பற்றியும் பேசி உள்ளார்.
பேட்டியில் அவர் கூறுகையில், நாங்கள் இப்போது தொடர்பில் இல்லை. அதே சமயம் எப்போதும் எங்கள் உறவு ரொம்ப ஸ்பெஷல். மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடிய வயதில் நாங்கள் ஒருவர் வாழ்க்கையில் ஒருவர் வந்து விட்டோம் என கூறிய தீபிகா, ரன்வீர் பற்றி பேசுகையில், ரன்வீர் மிகவும் வெளிப்படையான உற்சாகமான ஆள். யாரையும் சட்டென்று கவர்ந்து விடுவார். உறவு என்பது ஒரே இரவில் ஏற்பட்டு விடுவது இல்லை. இது ஒரு சமன்பாடு போன்று. அதை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு நல்ல மனிதராக ரன்வீரிடம் ஏதோ ஸ்பெஷலாக உள்ளதாக நான் நினைக்கிறேன் என கூறி உள்ளார்.