ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அப்பாவின் மறைவை திரைபிரபலங்கள் யாரும் கண்டுகொள்ளாதது மனதிற்கு வருத்தம் அளிப்பதாக ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் ஆகாஷ் கூறியுள்ளார். ஒரு காலத்தில் தன் ஒளிப்பதிவால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அசோக்குமார்(70). இயக்குனர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள், ஜீன்ஸ் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் அசோக்குமார். அவர், காமாக்னி, அன்று பெய்த மழை படங்களையும் இயக்கியுள்ளார்.
கடந்த 6 மாத காலமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், தீபாவளி தினத்தன்று(அக்., 22ம் தேதி) அவர் மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது இறுதிசடங்கில் ஒருசில திரைபிரபலங்களை தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து மனவருத்தப்பட்டு இருக்கிறார் அசோக்குமாரின் மகன் ஆகாஷ்.
அவர் கூறியுள்ளதாவது, அப்பா புகழின் உச்சத்தில் இருந்தபோது அவரை காண இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும் வருவார்கள், ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகிய பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. கடைசியில் அவர் இறந்தபோது அவரை காண பெரும்பாலபான திரைநட்சத்திரங்கள் யாரும் வரவில்லை, ஒருசிலர் மட்டுமே வந்தனர். இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நாம் எல்லோரும் எந்த மாதிரியான உலகத்தில் இருக்கிறோம் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.