பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
'கத்தி' திரைப்படம் கேரளாவிலும் மிகப் பெரிய அளவில் திரையிடப்பட்டு, அங்கு ரசிகர்களாலும் பட வெளியீடு கொண்டாடப்பட்டது. வடக்கஞ்சேரி என்ற ஊரில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் விஜய்யின் மிகப் பிரம்மாண்டமான கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயற்சித்த போது, தவறி விழுந்து இறந்தார். கேரளாவில், அதிர்ச்சிகரமான சம்பவமாக நடந்து இந்த மரணத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
தனது ரசிகர் ஒருவரின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட விஜய், அதற்காக அவருடைய இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நேற்றைய கொண்டாட்டத்தில் மரணமடைந்த உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தார், நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்மான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது பிரியமாக உள்ள ஒருவரின் இழப்பை ஈடுசெய்யவே முடியாது, அது எப்போதும் எனது இதயத்தில் இருந்து கொண்டேயிருக்கும்.
எனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், தீபாவளி போன்ற விழாக்காலங்களில், உங்களது ஆதரவை உங்களது உயிருக்கும் மற்றவர்களது உயிருக்கும் ஆபத்தில்லாமல் தெரிவியுங்கள். தகுந்த பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருங்கள், இல்லையென்றால் இது போன்ற சம்பவங்கள் தாங்கிக் கொள்ள முடியாத வலிகளை ஏற்படுத்தும். உங்கள் மீதான உங்கள் மரியாதைதான் என் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கான அடையாளமாக இருக்கும், ” என விஜய் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் கேரளாவிற்குச் சென்று அந்தக் குடும்பத்தினருக்கு நேரடியாக ஆறுதல் சொல்லி, உதவிகள் செய்வாரா என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.