ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஞ்சான் படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை டீசன்டாக நடித்து வந்தவர்தான் சமந்தா. ஆனால் அஞ்சான் படத்தில்தான் கிளாமராக நடித்தால் மார்க்கெட் பரபரப்பாகி விடும் என்று சொல்லி அவரை பிகினி உடையணிந்து நடிக்க வைத்தனர். அதனால் தனது ஹோம்லியான நடிகை என்கிற இமேஜை உடைத்தெறிந்து விட்டு கிளாமர் ரோலில் நடித்தார் சமந்தா.
ஆனால் அப்படி நடித்த அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.படம் தோல்வியடைந்ததோடு அவரது இமேஜையும் டேமேஜ் பண்ணியது. இந்த நிலையில், தற்போது விஜய்யுடன் அவர் நடித்து வெளியாகியுள்ள கத்தி படம் சமந்தாவுக்கு மறுபடியும் நல்லதொரு இமேஜை உருவாக்கியிருக்கிறது. கதைக்கு தேவையானபடி அசத்தலாக நடித்திருக்கிறார் என்று ரசிக கோடிகள் சபாஷ் கொடுத்து வருகின்றனர்.
அதனால் தமிழில் கத்தி மூலம் முதல் வெற்றியை அடைந்திருக்கும் சமந்தா, ரசிகர்கள் கிளாமரை விட கருத்தாழமுள்ள கதைகளுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறார்.
இதையடுத்து சமந்தா விடுத்துள்ள செய்தியில், கத்தி படத்தின் விமர்சனமும், எனது நடிப்பு குறித்த கருத்துக்களும் என்னை சந்தோசப்படுத்தியுள்ளன. ஒரு நல்ல படத்தில் நடித்தோம் என்ற திருப்தியில் இருககிறேன். மேலும், ரசிகர்களை கவர கிளாமர் தேவையில்லை. என்பதும் தெளிவாகி விட்டது அதனால் இனிமேல் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.