ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
சர்ச்சை, போராட்டம், பெட்ரோல் குண்டு வீச்சு என பலதரப்பட்ட தடைகளை கடந்து ஒருவழியாக தியேட்டர்களுக்கு வந்து விட்டார் கத்தி விஜய். அதனால் ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பே தொடங்க வேண்டிய டிக்கெட் புக்கிங் தீபாவளிக்கு முந்தின நாளான 21-ந்தேதிதான் தொடங்கியது. ஆனபோதும் ஒரே நாளில் ஒரு வாரம் புக்காகி விட்டது.
அதனால் 22-ந்தேதியில் இருந்தே கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி கத்தி திரையிடப்பட்ட எப்எம்எஸ் ஏரியாக்களிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், கத்தி முதல் இரண்டு நாள் வசூல் 30 கோடியை தாண்டி விட்டதாம். அதனால் அடுத்த ஓரிரு தினங்களில் 50 கோடியை கடந்து விடும் என்கிறார்கள்.
மேலும் விஜய் இதுவரை நடித்த படங்களில் கத்தியே சிறந்த படம் என்கிற கருத்துக்களும் ரசிகர்கள் மத்தியில எழுந்திருப்பதால், கத்தி படத்தின் வசூல் நாளுக்கு நாள் எகிறும் என்கிறார்கள். அந்த வகையில, ஏற்கனவே விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி சேர்ந்த துப்பாக்கி படத்தின் வசூலை விட கத்தி வசூல் பன்மடங்கு எகிறி விடும் என்றும் கூறப்படுகிறது.