ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அசின் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே நயன்தாராவுக்கும் இந்தி சினிமாவில் பிரவேசித்து இந்திய அளவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் வில்லு படத்துக்குப் பிறகு பிரபுதேவாவுடன் ஏற்பட்ட காதலால் சினிமாவில் அவருக்கு போதிய நாட்டமில்லை. அவரை திருமணம செய்து கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்றுதான் நினைத்தார்.
ஆனால், அவர்களது காதல் கல்யாணத்தில் இணையப்போகும் கடைசி தருத்தில், திடீரென்று பிரபுதேவாவுடனான உறவையே முறித்துக்கொண்டு வெளியேறிய நயன்தாரா, மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். அதோடு விட்ட இடத்தை பிடித்து தற்போது தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் அவர் நடித்த ஸ்ரீராமராஜ்ஜியம், அனாமிகா படங்களைப் பார்த்த சில பாலிவுட் இயக்குனர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள கதைகளில் நடிக்க நயன்தாராவுக்கு சமீபத்தில அழைப்பு விடுத்தார்களாம். ஆனால், கதையைகூட கேட்காமலேயே இந்தியில் நடிக்க எனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி அனுப்பி விட்டாராம் நயன்தாரா.
ஆனால் இதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, இந்தியில் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் நயன்தாராவின் மனதளவில் உள்ள ஆசையே. ஆனால் தற்போது பிரபுதேவா இந்தியில் படங்கள் இயக்கி வருவதால், அவர் இருக்கிற பீல்டுக்கு சென்றால், பழைய கதைகளை கிளறி விட்டு மீண்டும் கிசுகிசு பரப்புவார்கள். அதனால் மனநிம்மதிதான் கெடும் என்பதால்தான் இந்தி சினிமாவே வேண்டாம் என்ற முடிவில் நயன்தாரா இருப்பதாக சொல்கிறார்கள்.