ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
'காஞ்சனா' மற்றும் 'அரண்மனை' போன்ற திகில் படங்களில், ராய் லட்சுமி நடித்திருந்தார். ஆனால் பேயாக நடிக்கவில்லை. பேய்க்கு பயப்படும் வேடத்தில் தான்
நடித்திருந்தார்.தற்போது ஒரு படத்தில், பேய் வேடத்திலேயே நடிக்க கமிட்டாகி உள்ளார் ராய் லட்சுமி. இதுபற்றி அவர் கூறும் போது, 'திகில்
படங்களை பொறுத்தவரை, பேய் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு தான் முதலிடம் தருவர். அவர்களை சுற்றியே கதை செல்லும். அதனால், அப்படியொரு வேடத்தில் நாமும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நான் இருந்த போது தான், ஒரு இயக்குனர் மிரட்டலான ஒரு பேய் கதையை சொல்லி என்னை ஒப்பந்தம் செய்துள்ளார். அதனால், முதன்முறையாக பேயாக தோன்றி, மற்றவர்களை கதிகலங்க வைக்கப் போகிறேன்' என்கிறார்.