ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். எஸ்.எஸ்.ஆர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான, ''பராசக்தி'' படத்தில் தான் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூம்புகார், மறக்க முடியுமா போன்ற படங்கள் காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியங்கள். தனது எழுச்சி மிகு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு லட்சிய நடிகர் என்று பட்டமும் கொடுக்கப்பட்டது. நடிகராக மட்டுமல்லாது எம்.எல்.ஏ., மற்றும் எம்பி-யாகவும் இருந்துள்ளார்.
தற்போது 86 வயதாகும் எஸ்.எஸ்.ஆர்., கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த இருதினங்ளாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து, அவர் இன்று(அக்., 23ம் தேதி) சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.எஸ்.ஆரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு நுரையீரல் தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இன்னும் 24 மணிநேரத்திற்கு பிறகே எதுவும் சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து டாக்டர்கள், எஸ்.எஸ்.ஆரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எஸ்.எஸ்.ஆர். மனைவி தாமரைச்செல்வி, மகன் கண்ணன் மற்றும் மகள் லட்சுமி ஆகியோர் அவரை உடன் இருந்து கவனித்து வருகின்றனர்.